Type Here to Get Search Results !

மீண்டும் ஏவுகணைகளை பறக்க விட்ட ஈரான்..!

 


வடக்கு இஸ்ரேலின் தம்ராவில் ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹைஃபாவின் கிழக்கே உள்ள நகரத்தில் இரண்டு மாடி வீட்டை ஈரானிய ஏவுகணை தாக்கியதை அடுத்து, ஒரு பெண் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளதுடன் ஏழு பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்கள் சிறிது நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜெருசலேம் வான்பகுதியிலும் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad