குடும்பஸ்தர் ஒருவர் துடிதுடிக்க அடித்து கொலை-60 வயது தாத்தா வெறியாட்டம்..!

எட்டிபொல, கல்தொர ஹேன பகுதியில் நேற்று (13) கூரிய ஆயுததத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக யடவத்த பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் 45 வயதுடைய வாலவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதோடு, கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

கொலையுடன் தொடர்புடைய நபர் 60 வயதுடையவர் எனவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யடவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post