இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீடிக்கத் தான் விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"எங்களிடம் அதிக நேரம் இல்லை" என்று குறிப்பிட்ட அவர், விரைவில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்கும் என்று எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க இராணுவம் தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
