பண்டாரவளை - வடக்கு கெபில்லவெல பகுதியில் சிற்றூந்து ஒன்றுடன் உந்துருளியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் உந்துருளியை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பண்டாரவளையிலிருந்து 3 ஆவது கட்டை வீதி ஊடாக பதுளை நோக்கி பயணித்த உந்துருளியும் எதிர்த்திசையில் வந்த சிற்றூந்தும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் உந்துருளியை செலுத்திய நபரும், அதன் பின்னால் பயணித்தவரும் பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உந்துருளியை செலுத்திவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சிற்றூந்து சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
.jpeg)