மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (25) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உன்னிச்சை நெடியமடுவைச் சேர்ந்த 63 வயதுடைய கணவதிபிள்ளை யோகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டவராவார்.
இன்று காலை 8.00 மணியளவில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு பொது மக்கள் அறியப்படுத்தினர் இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் தடவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
.jpeg)