இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தாக்குதலுக்கு உள்ளானவர் பெண் பிள்ளை ஒருவரை கிண்டல் செய்ததாக கூறி, நோர்வேயில் இருந்து வந்தவரால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி தாக்குதல்தாரியின் வீட்டுக்கு வேலைக்கு சென்றபோது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் பயங்கரமான கத்தி முனையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் கத்தியை வைப்பதற்கு மோட்டார் சைக்கிளில் ஒரு விசேட ஏற்பாடு செய்து அந்த கத்தியை கொண்டுதிரிந்து அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தெரியவருகிறது.
அந்த கூலித் தொழிலாளி மதுபோதையில் சில தினங்களுக்கு முன்னர், நோர்வேயில் இருந்து வந்தவருடன் முரண்பட்ட நிலையிலேயே அதற்கு பழிவாங்குவதற்காக பெண்ணை கிண்டல் செய்ததாக பொய் கூறி இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் சாதியப் பிரச்சினையே இதற்கு அடிப்படை காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



