இந்நிலையில் போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த ஹரிகிருஷ்ணா கலக்கமடைந்தார். இதனால் தனது மனைவி பிரணிதி, குழந்தைகள் மூகாம்பிகா (5), கவுசிகிருஷ்ணா (3) ஆகியோருடன் பிரகாசம் மாவட்டம் சிங்கராயகொண்டா ரயில் நிலையத்தின் 2ம் நடைமேடைக்கு நேற்று வந்தார். அப்போது அங்கு வந்த சரக்கு ரயில் முன் குழந்தைகளை தள்ளிய தம்பதியினர், தாங்களும் அந்த ரயில் முன் பாய்ந்தனர். இதில் 4 பேரும் உடல் சிதறி இறந்தனர். இதையறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடிக்கணக்கான சொத்துக்காக அக்காவின் கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த வாலிபர், தனது குழந்தைகளை ரயிலில் தள்ளி கொன்றுவிட்டு அதே ரயிலில் பாய்ந்து மனையியுட…