கொழும்பு - பொரளை மத்தியில் உள்ள பல்பொருள் அங்காடியில் சற்று முன்னர் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு அதிகாரிகளின் முயற்சியில் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார மீட்டர் பலகை உள்ள இடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது குறித்த இடத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் மின்சார சபையினர் உள்ளிட்டோர் வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.