பல்கலைகழகத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு சற்று முன் பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு..!

 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பரீட்சைத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி, 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை | Students Who Have Qualified For University

இது மொத்தத்தில் 64.43% ஆகும், இதில் 149,964 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 27,624 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர். இதில் 222,774 பாடசாலை பரீட்சார்த்திகளும் 51,587 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவர்.

இதற்கிடையில், அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்கள் முடிவுகளை 28 ஆம் திகதிக்கு  முதல் பதிவிறக்கம் செய்து கண்காணிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.