சற்று முன் வீதியை விட்டு வழுக்கி சென்ற பேரூந்து-பதறிய பயணிகள்..!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உதுவான்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு வழுக்கிச் சென்றுள்ளது. 

இந்த விபத்து இன்று  காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.