திடீரென தம் மதிப்பை உயர்த்திய மரக்கறிகள்..!

 

யாழ்ப்பாணம் வடமராட்சி மரக்கறி சந்தைகளிகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் ஒரு கிலோகிராம்  தக்காளி, கரட் என்பன 1000 ரூபாவிற்கும், கத்தரி 600 முதல் 800 ரூபாவுக்கும்  விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பச்சை மிளகாய் மட்டும் 200 ரூபாவுக்கு  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.