மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்குத் தேவையான விடயங்களுக்கு முடிந்தவரை முன்னுரிமை வழங்கப்படும் எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்துள்ளது.

தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (28) நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு வழங்கப்படவுள்ள முன்னுரிமை! | Priority Given To Educational Needs Of Students

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் உயர்தர மாணவர்களுக்கான வகுப்பு கட்டணம் 80 ரூபாவாகவும் தரம் 06 - 11 வரையான மாணவர்களுக்கான கட்டணம் 50 ரூபாவாகவும் அறவிடப்படுகின்றது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபையில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும் பிரதேச சபையினால் இலவசமாக கல்வியை வழங்க ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் கல்விக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களால் ஏழை மாணவர்களுக்கான வசதிகள் சுலபமாக்கப்பட வேண்டும் என்று எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்துள்ளது.