பிறந்த நாளில் மயங்கி சரிந்து கல்லூரி மாணவி பலி : கதறித் துடிக்கும் பெற்றோர்!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிராவட்டம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ராஜன்-பிந்து. இவர்களுடைய மகள் ஸ்ரேயா 12 ம் வகுப்பு படித்து முடித்துள்ளாள்.
இவர் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில் கல்லூரியில் பட்டப்படிப்பு படிப்பில் சேர தயாராக இருந்தார். அன்றைய தினம் காலை நேரத்தில் குளிப்பதற்காக பாத்ரூம் சென்ற நிலையில் திடீரென அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பிந்து உடனடியாக தன்னுடைய மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ஸ்ரேயா உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர். மாணவி இதய பிரச்சினை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்தநாள் அன்றே மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் குடும்பமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக
Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.
Copied code!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.