கனகராயன்குளம் பொலிஸ் பிரிவில் A-09 வீதியில் புதுக்குளம் சந்தி பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று திடீரென வீதியின் வலதுபுறம் திரும்பிய போது, அதே திசையில் பயணித்த பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் அதில் பயணித்த இரண்டு பயணிகளும் படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் நெடுங்கேணியைச் சேர்ந்த 46 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், வெல்லவாய பொலிஸ் பிரிவின் எல்ல-வெல்லவாய வீதியில் 6வது மைல்கல் பகுதியில் லொறியொன்று வளைவில் பயணித்துக் கொண்டிருந்த போது, பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பண்டாரவளை, துங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஹோமாகம பொலிஸ் பிரிவின் ஹைலெவல் வீதியில் உள்ள பிடிபன சந்தியில், பேருந்து ஒன்று, கிளை வீதியில் இருந்து ஹைலெவல் வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாவத்கம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.