திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதியின் இரணைக்கேணியில் நேற்று நண்பகல் இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு ஆண்கள் பலத்த காயமடைந்த நிலையில் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காரைச் செலுத்தி வந்தவர் காயங்கள் இன்றி தப்பியுள்ளார். எனினும், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன.
திருகோணமலையில் இருந்து புல்மோட்டை நோக்கி ஒரே திசையில் பயணித்த போது, கார் திடீர் என வலது புறமாகத் திரும்ப முற்பட்டுள்ளது. இதையடுத்தே விபத்து இடம்பெற்றுள்ளது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இது தொடர்பான விசாரணைகளைக் குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

