வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவி ஜக்சனா கணேசலிங்கம் 9A சித்தி பெற்று சாதனை!!
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
அந்த பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி ஜக்சனா கணேசலிங்கம் ஒன்பது பாடங்களிலும் “A” சித்தியினை பெற்றுள்ளார்.
இம் மாணவிக்கு குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலை சமூகத்தினர் என அனைவரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.