குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்கள் ஆர்.பி.கே பெருந்தோட்ட யாக்கத்துக்கு உரித்தான சாமிமலை ஸ்ரஸ்ப்பி தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த பெண்கள் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்களும் 45 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இன்று காலை 11,45 மணியளவில் தேயிலைக் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தாக்கியது என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.