சற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 4.5 சதவீதமாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

நாட்டில் வேலையின்மை குறைந்துள்ளது | Unemployment In The Srilanka Has Decreased

மேலும், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 47.1 சதவீதமாக இருந்த தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 49.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் மொத்த வேலையில் உள்ளவர்களில் 26.8 சதவீதம் பேர் விவசாயத் துறையில் பணிபுரிகின்றனர்.

அதே நேரத்தில், தொழில்துறை துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 25.7 சதவீதம் ஆகும். அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புள்ளவர்கள் சேவைத் துறையில் பணிபுரிகின்றனர்.

இது 47.6 சதவீதம் ஆகும் என க்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.