ஆன்லைன் மோசடி விசாரணையில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டறிய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
270/6, இஹல போமிரிய, கடுவெல பகுதியைச் சேர்ந்த லியனதுகோரலலாகே டொன் நிரோஷன் சமீர (தே.அ.அ. 780232196V) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், பரிசுப் பொதிகள் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, வங்கி வைப்புகள் மூலம் மோசடியாக பணத்தைப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்குகளை இந்த மோசடித் திட்டத்திற்காக பராமரித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதி விசாரணைப் பிரிவு இந்த விசாரணையை முன்னெடுக்கிறது. இந்த விசாரணை தொடர்பான வழக்கு தற்போது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் 071-8594911 அல்லது 011-2320140 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.