இலங்கையில் மாணவன் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்-நெஞ்சை ஊருடுவி கிழித்த சம்பவம்-கதறி துடிக்கும் உறவுகள்..!

 கடான பாடசாலை மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (11) அன்று உயிரிழந்துள்ளதாக கடான பொலிஸார் தெரிவித்தனர்.

கடான பிரதேசத்தைச் சேர்ந்த டி.எஸ். சஞ்சீவ அலஹகோன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மாணவன் பரிதாப உயிரிழப்பு | School Student Tragically Dies

குறித்த மாணவனின் பெரியப்பா கிரைண்டர் மூலம் சேவைகளை வழங்கும் தொழிலை நடத்தி வருவதுடன் அவர் இல்லாத போது, மாணவன் கிரைண்டர் மூலம் பி.வி.சி பைப்பை வெட்டிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதன் போது கிரைண்டரின் பிளேட்டின் ஒரு பகுதி உடைந்து மாணவனின் மார்பில் ஊடுருவி உள்ளே சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post