கைதியுடன் தனிமையில்’ லீக் ஆன வீடியோ.. இந்த பெண் யாருன்னு தெரியுதா..? அதிர்ச்சியில் முக்கிய புள்ளிகள்!


ஆந்திரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதியுடன் ஒரு பெண் நெருக்கமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தப் பெண், அருணா. ஒரு சாதாரண பொட்டிக்கடை உரிமையாளராகவும், சமூக சேவகியாகவும் வெளியுலகிற்கு தோற்றமளித்தாலும், குற்ற உலகில் ‘டான்’ போல செயல்பட்டு வந்தவர் இவர்.


இவரது கதை, ஆந்திர அரசியல் முக்கிய புள்ளிகளை மற்றும் காவல்துறையை உலுக்கிய ஒரு புயலாக மாறியது எப்படி? விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

அருணாவுக்கு திருமணமாகி, கணவர் மற்றும் பிள்ளைகள் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த பிறகு, அவருக்கு ரவுடி ஸ்ரீகாந்துடன் பழக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீகாந்தின் குரல், அருணாவின் மறைந்த கணவரின் குரலை ஒத்திருந்ததால், அவரை காதலிக்கத் தொடங்கினார். 2010ஆம் ஆண்டு மதுக்கடை மேலாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஸ்ரீகாந்த், நெல்லூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


2014இல் சிறையில் இருந்து தப்பிய அவர், 2018இல் மீண்டும் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீகாந்த் சிறையில் இருந்தபோது, அருணா அவரது குற்ற சாம்ராஜ்யத்தை தலைமையேற்று நடத்தினார்.

கஞ்சா விற்பனை, கட்டப் பஞ்சாயத்து, ரவுடிகளை ஒருங்கிணைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது என கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.


ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, அக்கட்சி தலைவர்களின் ஆதரவுடன் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இதனால், மாவட்டத்தில் அவரது கட்டளைதான் சட்டமாக இருந்தது.

சமீபத்தில், ஸ்ரீகாந்த் பரோலுக்கு விண்ணப்பித்தார். நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் சிறை கண்காணிப்பாளர், அவருக்கு பரோல் வழங்கினால் கடுமையான குற்றங்கள் நடைபெறலாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பை மீறி 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

கை உடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீகாந்தை, அருணா அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சந்தித்தார். இவர்கள் நெருக்கமாக இருந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது.

சீக்கிரமா பண்ணு.. என கைதியுடன் தனிமையில் உல்லாசமாக இருக்கும் இவருடைய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த வைரல் வீடியோவை அடுத்து, ஸ்ரீகாந்துக்கு வழங்கப்பட்ட பரோல் ரத்து செய்யப்பட்டது. மேலும், அருணாவின் அரசியல் செல்வாக்கு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான தொடர்பு குறித்து விமர்சனங்கள் எழுந்தன.


கைது மற்றும் விசாரணை

ஆட்சி மாறிய பிறகு சில ஆண்டுகள் அடக்கி வாசித்த அருணா, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார். கோவூரில் வீடு உடைப்பு, உள்துறை அமைச்சக அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி சிஐ-யை மிரட்டியது, கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அட்டாங்கி பகுதியில் அருணாவை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, காருக்குள் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், தன்னை கஞ்சா வழக்கில் திட்டமிட்டு சிக்கவைக்க முயல்வதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். மேலும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் தன்னை குறிவைத்து வீடியோவை பரப்பியதாகவும் குற்றம்சாட்டினார்.

கோவூர் காவல்துறையினர் அருணாவை கைது செய்து, அவரது குற்றச் செயல்கள் மற்றும் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அருணாவின் கதை, ஒரு சாதாரண பெண்ணிலிருந்து குற்ற உலகின் ‘ராணி’யாக உருமாறியதை வெளிப்படுத்துவதோடு, அரசியல் செல்வாக்கு மற்றும் காவல்துறையுடனான தொடர்புகள் மூலம் எவ்வாறு சட்டத்தை மீறி செயல்பட்டார் என்பதையும் தெளிவாக்குகிறது. இந்த விவகாரம் ஆந்திராவில் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post