நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, வலப்பனை பகுதியில் உள்ள மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா- வலப்பனை பிரதான வீதியின் மஹ ஊவா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 பேரை ஏற்றிக்கொண்டு நுவரெலியாவுக்குச் சென்று யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால் வீதியை விட்டு விலகி பாதுகாப்பு மண் மேட்டில் மோதி பேருந்து நின்றுள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மாற்று பேருந்தில் சென்றுவிட்டதாகவும் வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பேருந்தும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
Notification texts go here... Link
Reach out!

