வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

Sentamil Admin

 


மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த புயலுக்கு "சென்யார்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேல் - வடமேல் திசையில் நகர்ந்து, தென் அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் எனவும் இது மேலும் அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (25) தெரிவித்திருந்தது. நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது. கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.