Type Here to Get Search Results !

விவசாயிகளுக்கு சற்று முன் அநுர அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

 

நாட்டில் நெல் விற்க காத்திருக்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், 2025 - 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யூ. பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 140 ரூபாவாக செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஒரு கிலோகிராம் சம்பா நெல் 130 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் நாடு நெல் 120 ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இம்முறை நெல் கொள்வனவுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யூ. பின்னலந்த மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD