ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

 

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன்படி, அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக ஜப்பானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வலுவான தீவிரத்தன்மையுடன் பதிவாகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

நேற்று அந்நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கம் காரணமாக, கிழக்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கியிருந்தன. 

ஜப்பான் புவியியல் ரீதியாக "நெருப்பு வளையம்" (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு ஆண்டுக்கு சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 

மேலும், உலகம் முழுவதும் பதிவாகும் ரிக்டர் அளவுகோலில் 6.0 க்கும் அதிகமான நிலநடுக்கங்களில் 10% ஜப்பானிலேயே பதிவாகின்றன. 

2011 மார்ச் மாதம் இவாதே மாகாணத்தின் தெற்கே ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 9.0 ஆகப் பதிவான பாரிய நிலநடுக்கமே ஜப்பானில் இதுவரை பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும். அதன் விளைவாக ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்து, வரலாற்றின் மிக மோசமான அணுசக்தி பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

அந்தப் பேரழிவிற்குப் பிறகு, இத்தகைய எந்தவொரு நில அதிர்வின் போதும் மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post