பயிற்சிக்காக 15 வயது சிறுவனிடம் ஓட்டக் கொடுத்த அதே கார் மோதியதில் 86 வயது முதியவர் உயிரிழந்தார்.
மாவனெல்ல-அலுத்நுவர சாலையில் உள்ள அலுபோத்த பகுதியில் வெள்ளிக்கிழமை(08) இரவு இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் காரைத் தானே ஓட்டி வந்து தனது வீட்டருகே நிறுத்தியது தெரியவந்துள்ளது.
பின்னர், சிறுவனுக்குப் பயிற்சி அளிப்பதற்காக காரின் கட்டுப்பாட்டை அவனிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது, காரின் உரிமையாளர் சாலையின் மறுபுறம் செல்வதற்காக அந்த வாகனத்திற்கு முன்னால் சென்றுள்ளார்.
அவர் வாகனத்திற்கு முன்னால் சென்றுகொண்டிருந்தபோது, நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வேகமாக முன்னோக்கி வந்து அவர் மீது மோதியது.
உயிரிழந்தவர் மாவனெல்லா பகுதியைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஆவார். விபத்து நடந்தபோது ஓட்டுநர் இருக்கையில் இருந்த 15 வயது சிறுவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
.jpeg)