இலங்கை முழுவதும் உள்ள 34 மேல் நீதிமன்றங்களில் 4,421 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற நடவடிக்கை வரை கொண்டு செல்லப்பட்ட குற்றங்கள் மட்டுமே இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகள் இவை என்ற போதிலும் பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு பெரியோர்களோ அல்லது சிறுவர்களோ முன்வருவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காலி மேல் நீதிமன்றத்தில் 467, களுத்துறை மேல் நீதிமன்றத்தில் 267, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் 231, மாத்தறை மேல் நீதிமன்றத்தில் 212 போன்ற எண்ணிக்கைகளில் வழக்குகள் விசாரணையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான இந்தத் தரவுகள் மிகவும் வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
.jpeg)