ஸ்வப்ன சாஸ்திரம், நம் கனவில் வரக்கூடிய விஷயங்களும், அதற்கான விளக்கத்தை தரக்கூடிய ஒன்று. அதில் ஒவ்வொரு கனவுக்கும், அது வரக்கூடிய நேரம் உள்ளிட்டவற்றை பொறுத்து அதன் மூலம் நல்ல பலனை தருமா அல்லது அது கெட்ட அறிகுறியா? என்பதை உணர்த்தும். அந்த விதத்தில் ஒருவருக்கு திருமணம் தொடர்பான வித்தியாச, வித்தியாசமான கனவுகள் வரும் போது அதற்கான எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம்.
மணமகளின் பிரியாவிடையை கனவில் பார்ப்பது
உங்களுக்கோ அல்லது உங்கள் மகளுக்கு திருமணம் நடப்பது போன்றும், மகள் திருமணத்திற்கு பின் பிரியாவிடை கொடுப்பது போன்ற ஒரு கனவை கண்டால், அதை நினைத்து பீதி அடையத் தேவையில்லை. இது ஒரு சுப கனவாக பார்க்கப்படுகிறது. ஸ்வப்ன சாஸ்திரத்தின்படி, ஒருவர் பிரியாவிடை கொடுத்து செல்வது போன்று கண்டால் அவருக்கு எங்கிருந்தோ பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் வீட்டின் நிதி நிலை மேம்படும். அத்தகைய கனவை பார்ப்பதன் மூலம் உங்களுக்கு செல்வத்தை அதிகரிக்கும் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கக்கூடியது என்று எடுத்துக் கொள்ளலாம்.
கனவில் திருமணத்தை பார்ப்பதற்கான பலன்
ஸ்வப்ன சாஸ்திரத்தின்படி, ஒரு தம்பதிக்கு திருமணம் நடப்பது போன்று கனவில் கண்டால், அது நல்ல அறிகுறியாக கருதப்படுவதில்லை. அதனால் கனவு கண்ட அடுத்த மூன்று நாட்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் அத்தகைய கனவு துரதிர்ஷ்டமானதாக குறிப்பிடப்படுகிறது. இது உங்களின் எதிர்காலத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு.
மேலும் திருமணமான ஒருவர், இதுபோன்ற கனவை கண்டால் அவரின் திருமண வாழ்க்கையில் பிரச்னையை சந்திக்க வாய்ப்பு உண்டு. அதனால் குடும்பம் சார்ந்த முடிவுகளைக் கவனமாக எடுப்பது நல்லது.
கனவில் திருமண ஊர்வலத்தைப் பார்த்தால் என்ன பலன்
ஒருவரின் கனவில், ஒரு திருமண ஊர்வலத்தை கனவில் கண்டால் அது நல்ல அறிகுறியாக கருதப்படுவதில்லை. திருமண ஊர்வலமாக செல்வது போன்ற கனவால் எதிர்காலத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. இது உங்கள் வாழ்க்கையில் பிரச்னைகளையும், பதட்டத்தையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் சில நெருக்கடிக்குத் தயாராக இருப்பது நல்லது. இது போன்ற கனவு வந்தால் உங்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படவும்.
அதிலும் குறிப்பாக அந்த கனவில் மணமகனாக உங்களைக் கண்டால் அது துரதிர்ஷ்டவசமான அறிகுறியாக கருதப்படுகிறது. இதனால் விரைவில் பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும்.
ஒரு கனவில் திருமண முக்காடு பார்ப்பது
ஒருவரின் கனவில் திருமணத்திற்காக மணப்பெண் முக்காடு அணிந்து வருவது போன்று கண்டால் அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் உங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நேர்மறையான நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரும்.
கனவில் திருமண முக்காடு அணிந்து வருவதைப் பார்த்தால் உங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சி வரப்போகிறது என எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு, உங்கள் தொழில், வேலையில் வெற்றியைப் பெற்றுத் தரும்.
தலைப்பாகையுடன் மணமகன் வருவது போன்ற கனவு பலன்
ஒருவரின் கனவில் திருமணத்திற்காக மணமகன் தலைப்பாகை அணிந்து வருவதைப் போன்று பார்த்தால், அந்த கனவு நல்ல அறிகுறியாக கருதப்படுவதில்லை. கனவில் தலைப்பாகையை பார்ப்பது உங்கள் குடும்பத்தில் ஏதோ ஒரு விஷயத்தில் பிளவு ஏற்படக்கூடும். அதனால் உங்கள் பேச்சில் இனிமையும், செயலில் நிதனமும் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாக நேரத்தை செலவிட முயலவும். குடும்ப உறுப்பினர்களை விட்டுக் கொடுத்துச் செல்லவும்.