Type Here to Get Search Results !

காக்கை தீவுக்கு மீன் வாங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்-கதறி துடிக்கும் உறவுகள்..!

யாழ்ப்பாணத்தில் சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி ரவீந்திரன் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்று காலை மீன் வாங்குவதற்காக காக்கைதீவு சந்தைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் சந்தையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad