ஏழைகளுக்கு கண் அறுவை சாகிச்சை செய்ய இருந்த சிறப்பு கண்சிகிச்சை நிபுணரின் உயிரை பறித்த காலன்..!

 

வத்துபிட்டிவல  மருத்துவமனையின் சிறப்பு கண் அறுவை சிகிச்சை நிபுணரான துமிந்த சமன் குமார  பித்தப்பை வெடித்ததால் திடீரென உயிரிழந்ததாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நயனஜித் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்

மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறப்பு மருத்துவர், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​

அவரது பித்தப்பை வெடித்து திடீரென இறந்தார் என்று வத்துபிட்டிவல மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நயனஜித் பண்டார தெரிவித்தார்.

சடலத்தின் பிரேத பரிசோதனை புதன்கிழமை (11)  நடைபெற்றது.

வத்துபிட்டிவல மருத்துவமனையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஐம்பது ஏழை கண் நோயாளிகளுக்கு 50 உள்விழி லென்ஸ் மாற்று அறுவை சிகிச்சைகளை நிபுணர் டாக்டர் துமிந்த சமன் குமார 13 ஆம் திகதி செய்யவிருந்தார்.