குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் 07.07.2025 மாலை 5 மணியளவில் தேன் எடுப்பதற்காக சென்றவர் தேன் எடுக்க மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.
இந் நிலையில் குறித்த நபர் உறவினர்களில் உதவியுடன் சிகிச்சைகளுக்காக தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்துரை. துரை ராசா எனும் 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இறந்தவரின் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.