வலையை இழுத்த மீனவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

 

மஹியங்கனை, மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  மீனவரின் வலையில் துப்பாக்கியொன்று  சிக்கியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 துப்பாக்கியே இன்றுகாலை மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. 

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.   

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் அறிவுறுத்தலின் பேரில், மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.