மருத்துவரை 4 முறை வன்கொடுமை செய்த சப் இன்ஸ்பெக்டர்...!!! மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டம் பால்டனில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நேற்று இரவு இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்கொலைக்குப் பின் எழுந்துள்ள தகவல்கள் சதாரா காவல்துறையிலும் சுகாதாரத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்கொலை செய்யும் முன், மருத்துவர் தனது கையில் எழுதிய தற்கொலைக் குறிப்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பட்னே நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், காவல் அதிகாரி பிரசாந்த் பங்கர் தொடர்ந்து மனதளவில் சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்...
