கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட A9 வீதியின் தட்டுவன்–கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று காலை இனங்காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். பெண்களின் பாதுகாப்புக்கு பெயர்போன நம்மூரில் இவ்வாறான சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை மறுக்க இயலாத உண்மை.
