செவனகல - கட்டுப்பில வாவி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
உயிரிழந்த சிறுவன் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவனது உடல் தற்போது எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
