சற்று முன் அதிர்ந்த தென்னிலங்கை..!

 

பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24) மாலை  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச் சூட்டின் இலக்காக இருந்த நபர், தாக்குதலின் போது தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை பதிவாகவில்லை என்பதுடன், மேலும் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.